ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
image courtesy: @IPL / @gujarat_titans / @SunRisers
image courtesy: @IPL / @gujarat_titans / @SunRisers
Published on

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com