பிளே ஆப் சுற்று: பெங்களூரு அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு

நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ngiபெங்களூரு,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றிலிருந்து பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நிகிடி விலகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கு தயாராகும் பொருட்டு அவர் தாயகம் திரும்ப உள்ளார்.

அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளரான முசரபானியை பெங்களூரு நிர்வாகம் மாற்று வீரராக அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com