இந்தியாவிற்கு வந்தடைந்த கால்பந்து உலகக் கோப்பை

ந்தியாவில் பிபா கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.;

Update:2026-01-11 16:05 IST

நியூயார்க்,

நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்பட 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.

இந்நிலையில், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிபா உலகக்கோப்பை இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் பிபா கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

உலகக் கோப்பை வென்ற முன்னாள் பிரேசில் வீரரும் ஃபிஃபா ஜாம்பவானுமான கில்பர்டோ டி'சில்வா மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்