இந்திய மகளிர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம்

தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம்
Published on

சென்னை,

இந்திய மகளிர் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது.அவரது முதல் தொடராக மார்ச் 8 முதல் 14, வரை ஐதராபாத்தில் நடைபெறும் பெண்கள் ஆக்கி உலகக் கோப்பை தகுதி சுற்று இருக்கும்.

பயிற்சியாளர் நியமனம் குறித்து மரிஜ்னே கூறியதாவது,

4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன். அணியின் வளர்ச்சியை ஆதரித்து, வீரர்கள் தங்கள் முழு திறனை உலக அரங்கில் அடைய உதவுவேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com