இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் வெளியேறிய பிவி சிந்து

இந்திய நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, டிஎல் நுயெனுடன் மோதினார்.;

Update:2026-01-14 16:50 IST

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, வியட்நாமின் டிஎல் நுயெனுடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 22-20, 12-21, 15-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்தார். இதனால் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்