தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.;
சென்னை,
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியன் ரெயில்வே அணி 65-53 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இன்னொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு 102-53 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..