புதுச்சேரி

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புதுவையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நல்லவாடு, ஆண்டியார்பாளையம், தானம்பாளையம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லவாடு பகுதியில் புதுநகரை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 22), ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (26) ஆகியோரின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது கடைகளில் இருந்து 1 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து