புதுச்சேரி

மோட்டார் திருடிய 2 பேர் கைது

காரைக்கால் அருகே குடிநீர் தொட்டி அறையில் இருந்த மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திரு-பட்டினம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து கீழவாஞ்சூர் பழைய குடிநீர் தொட்டி மோட்டார் அறையில் இருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய் இருந்தது. இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் அளித்த புகாரின்பேரில் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், திரு-பட்டினம் முதலித்தெருவை சேர்ந்த குமார் (வயது 38), அவரது நண்பர் வீரராஜ் (28) ஆகியோர் மோட்டார் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீர்மூழ்கி மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து