புதுச்சேரி

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

மூலக்குளம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மூலக்குளம்

புதுவை மேரி உழவர்கரை ஜான்குமார்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த அரவிந்த் (வயது 25), மேரி உழவர்கரை சக்தி நகர் தினேஷ் (21) என்பதும், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 1,120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து