புதுச்சேரி

வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

திருபுவனை பகுதியில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

திருபுவனை

திருபுவனை, மதடிகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனைபாளையம் பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நாய்களுக்கு அவ்வப்போது வெறி பிடித்து சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடித்து குதறி வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருபுவனை பகுதியில் வெறிநாய்கள் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திருபுவனை ஆரம்ப சுகாதார மையத்தில் நாய்கடி ஊசி போட சென்றனர். ஆனால் நாய்கடி ஊசி இல்லாததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை