புதுச்சேரி

முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தை

புதுச்சசேரி மாநிலம் திருபுவனையில் முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை கட்டப்பையில் விட்டுவிட்டு சென்றதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருபுவனை

திருபுவனை சீனிவாச நகரை சேர்ந்தவர் தேசிங் என்பவர் வீட்டின் அருகில் குழந்தை அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தார். அப்போது ஒரு பிக்ஷாப் கட்டப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த திருபுவனை போலீசார் குழந்தையை மீட்டு திருபுவனை சுகாதார மையத்தில் ஒப்படைத்தனர்.

திருபுவனை போலீசார் விசாரணை செய்ததில், திருபுவனையை சேர்ந்த 23 வயது இளம்பெணின் குழந்தை என்பதும், கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு முகநூலில் நட்பாக பழகிய ஒருவர், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கியதும் தலைமறைவு ஆகிவிட்டார். தனக்கு பிரசவலி வந்த நிலையில் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் அருகில் வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து