புதுச்சேரி

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

தினத்தந்தி

காலாப்பட்டு

காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணித்திட்டம் தொடக்க விழா, உலக ஓசோன் தினம் மற்றும் உலக தபால் தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வசந்தி முன்னிலை வகித்தார். இதில் சமுதாய நலப்பணித்திட்ட புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், விரிவுரையாளர் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். ஓசோன் படலம் பாதுகாப்பதன் அவசியம், இந்திய தபால் துறைப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். ஆசிரியை மாலதி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு