புதுச்சேரி

5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி

காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.

ஒடிசா தொழிலாளி

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை அருகே ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அலியா நாயக் (வயது 25) என்ற தொழிலாளி நேற்று 5-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டார். மாலை பணிகள் முடிந்த நிலையில், கட்டுமான பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டு இருந்தார்.

தவறி விழுந்து பலி

அப்போது எதிர்பாரா விதமாக தடுப்புச்சுவரை கவனிக்காமல் 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த சக தொழிலளார்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அலியா நாயக் பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை