புதுச்சேரி

நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்கம்பி

திருபுவனை அருகே நள்ளிரவில் மின்கம்பி அறுந்து விழுந்தது.

தினத்தந்தி

திருபுவனை

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையத்தில் கஸ்தூரிபாய் நகர் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி நேற்று இரவு திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. இதனை இன்று காலை பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக தெருவின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து யாரும் வராதபடி செய்தனர்.

இதுபற்றி திருபுவனை மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்து, மின்சாரம் வழங்கப்பட்டது.

மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் யாரும் அந்த வழியாக செல்லாததால் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்