கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சகுனி' படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இதன்பின் சூர்யாவுடன் இணைந்து 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட அவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்த அவர், தற்போது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புதிய உறவுக்காக காத்திருப்பதாகவும் அந்தப் பதிவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.