சைக்கிள் பியூர் அகர்பத்தியின் பண்டிகை கால புதிய தயாரிப்புகள் அறிமுகம் 
Branded Feature

77-வது ஆண்டைக் கொண்டாடும்  நறுமணத்தின் அடையாளம் - சைக்கிள் பியூர் அகர்பத்தியின் புதிய அறிமுகங்கள்! 

சென்னை,

உலகின் மிகப்பெரிய அகர்பத்தி தயாரிப்பு நிறுவனமான சைக்கிள் பியூர் அகர்பத்தி, தனது 77 ஆண்டுகால நறுமணச் சிறப்பைக் கொண்டாடும் வகையில், சென்னையில் தனது புதிய பண்டிகைக் கால தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

சைக்கிள் பியூர் அகர்பத்தி

இந்தியாவின் ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதிலும், நுகர்வோரின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் சைக்கிள் பியூர் அகர்பத்தி தொடர்ந்து பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.

ஆண்டுக்கு 1,200 கோடி ஊதுபத்திகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம், இன்று உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இல்லங்களுக்கு நம்பிக்கையின் நறுமணத்தைக் கொண்டு செல்வதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 கோடிக்கும் மேலான பிரார்த்தனைகளுக்குத் துணையாக நிற்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, இந்நிறுவனம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும், பாரம்பரிய கைவினைத்திறனை நவீன கண்டுபிடிப்புகளுடன் இணைத்து புதிய நறுமண அனுபவங்களை உருவாக்கி வருகிறது.

புதிய தயாரிப்புகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் சைக்கிள் ஸ்டெம் சாம்பிராணி, நவீன் பூஜை நெய், குட் லக் பிரீமியம் அகர்பத்தி (லாவெண்டர், சந்தனம், கஸ்தூரி) மற்றும் சைக்கிள் பியூர் கோல்டு பிரஸ்டு எடிபிள் நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்) ஆகியவை அடங்கும்.

அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தயாரிப்புகள், இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகளில் வேரூன்றிய அதே வேளையில், தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன.

இந்த அறிமுக விழாவில் பேசிய என்.ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், "77 ஆண்டுகளாக, எங்களின் பயணம் ஒரு எளிய தத்துவத்தால் வழிநடத்தப்படுகிறது - பாரம்பரியத்தை மதிப்பது, அதே வேளையில், மாறிவரும் நுகர்வோரின்  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து எங்களை மேம்படுத்திக் கொள்வது. இந்திய இல்லங்களில் நறுமணத்திற்கு எப்போதுமே ஒரு தனி இடமுண்டு. அந்த உணர்வுபூர்வமான தொடர்பைப் பாதுகாப்பதும், இன்றைய நுகர்வோருக்குப் பொருத்தமான தயாரிப்புகளை உருவாக்குவதும் எங்களது பொறுப்பாகும். நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பும் தரம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் நம்பகமான அங்கமாக இருப்பதை உறுதி செய்கிறது" என்று தெரிவித்தார்.

சைக்கிள் பியூர் அகர்பத்தியின் பண்டிகை கால புதிய தயாரிப்புகள் அறிமுகம்

என்.ஆர். குழுமம்

மைசூரைத் தலைமையிடமாகக் கொண்ட என்.ஆர். குழுமம், 1948-ஆம் ஆண்டு என். ரங்க ராவ் அவர்களால் நிறுவப்பட்டது. ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில்முனைவோரும் கொடையாளருமான திரு ரங்க ராவ், 'சைக்கிள் பியூர் அகர்பத்தி'யை உருவாக்கினார். அது இன்று உலகின் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் ஊதுபத்தி பிராண்டாக வளர்ந்துள்ளது. ஒரு உள்நாட்டு நிறுவனமாகத் தொடங்கிய என்.ஆர். குழுமம், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமாக உருவெடுத்துள்ளது.

இந்தக் குழுமம், செயல்பாட்டு காற்றுப் பாதுகாப்புப் பொருட்கள் (Lia), ஆரோக்கிய வீட்டு நறுமணப் பொருட்கள் (IRIS), மலர்ச் சாறுகள் (NESSO) மற்றும் ரங்சன்ஸ் டெக்னாலஜிஸ் எனப் பல துறைகளில் தனது வணிகத்தைப் பன்முகப்படுத்தியுள்ளது. இன்று, இது பாதுகாப்பு ஹெலிகாப்டர்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் "அகர்பத்தி முதல் விண்வெளி வரை" என்ற ஒரு குழுமமாக உருவெடுத்துள்ளது. தனது தொண்டுப் பிரிவான என்.ஆர். அறக்கட்டளை மூலம், இந்தக் குழுமம் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. இன்று, என்.ஆர். குழுமம், ரங்க ராவ் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்படுகிறது.