Branded Feature

சத்தியபாமா பல்கலைக்கழக 91.88 சதவீத மாணவ - மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை: அபிஷேக் ஷர்மா வழங்கினார்

அதிகபட்சமாக 40 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 41.20 லட்சம் ஊதியத்தில் தேர்வாகியுள்ளனர்.

சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2026-ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன், அபிஷேக் சர்மா , இந்தியன் கிரிக்கெட் வீரர், மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வேலை வாய்ப்பு முகாமில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். 

கல்லூரியின் வேந்தர் மற்றும் தலைவர் இருவரும் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். 

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 91.88 சதவீத விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர். 

40 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 41.20 லட்சம் ஊதியத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது. 

2026-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 380-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 3633 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் உயர்கல்விக்கான ஆலோசனை குழு மூலம் படித்து வந்த 235 மாணவர்கள் மேற்படிப்புற்காக அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் படிக்கவுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படிக்க தேர்வாகியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.