பெங்களூரு

சங்கிலி தொடர் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

பெங்களூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு பல்லாரி சாலை உள்ள ஜக்கூர் மேம்பால பகுதியில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஒரு ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் கார், ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி அந்த காரை ஓட்டி சென்ற தனியார் நிறுவன ஊழியரான சஞ்சீவ் குமார் என்பவர் உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதுபோல ஆட்டோ டிரைவரான யராப் என்பவரும் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...