மும்பை

காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளையர்கள்

காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை, 

காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரம்

பீட் மாவட்டம் யெலம்ப்காட் பகுதியில் மகாராஷ்ட்ரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் முகக்கவசம் அணிந்தபடி காரில் வந்த கும்பல் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்தது. அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிற்றை கட்டி இழுத்து பெயர்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை கருவி அலாரம் எழுப்பியது.

கும்பலுக்கு வலைவீச்சு

இதனால் பயந்து போன கும்பல் ஏ.டி.எம். எந்திர கொள்ளை முயற்சியை கைவிட்டனர். அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். காரை கட்டி இழுத்ததால் ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து