புதுச்சேரி

மீனவர் மீது தாக்குதல்

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன் (வயது 26). மீனவர். இவர் சம்பவத்தன்று இரவு கடற்கரைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன், அருள் ஆகியோர் தகராறு செய்துகொண்டு இருந்தனர். இதனை பார்த்த மதியழகன் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வமுருகன், கீழே கிடந்த கல்லை எடுத்து மதியழகனை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த செல்வமுருகனின் மனைவி அஞ்சலாட்சி மற்றும் மகன்களும் மதியழகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்