மும்பை

ஆட்டோ கவிழ்ந்து வங்கி உதவி பெண் மேலாளர் பலி

நவி மும்பையில் 15 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து வங்கி உதவி பெண் மேலாளர் பலியானார்.

தினத்தந்தி

மும்பை,

நவிமும்பையை சேர்ந்த 10 பேர் சுற்றுலாவிற்காக அலிபாக் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றனர். இந்த ஆட்டோவில் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த 25 வயது பெண் உடன் சென்றார். மாண்டுவா-அலிபாக் நெடுஞ்சாலை ரகாட்லே கிராமம் அருகே ஆட்டோ சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஆட்டோ சாலையில் தாறுமாறாக சென்று சாலையோரமாக இருந்த 15 அடி கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனர். உதவி பெண் மேலாளர் படுகாயமடைந்ததால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்சு மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உதவி பெண் மேலாளர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்