புதுச்சேரி

முத்து மாரியம்மனுக்கு பட்டாபிஷேகம்

தவளக்குப்பம் அருகே காசாந்திட்டு முத்து மாரியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அருகே காசாந்திட்டு கிராத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

SCROLL FOR NEXT