புதுச்சேரி

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.

தினத்தந்தி

புதுச்சேரி

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவுக்கு ஏற்ப, புதுவை மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, லாஸ்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு செல்வகணபதி எம்.பி. தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், இலவசமாக தேசிய கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. பிரமுகர்கள் ஜெயபிரகாஷ், மவுலிதேவன், சந்துரு, வேலு, கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்