புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்

லாஸ்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்தான முகாம் நடந்தது.

தினத்தந்தி

புதுச்சேரி

பிரதமர் நரேந்திரமோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செல்வகணபதி எம்.பி. அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முகாமில் பிரதமரின் மோடியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

அவர்களிடம் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் டாக்டர் டயானா தலைமையிலும், அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரும் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு