வணிகம்

போர் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் குறைந்து ரூ.91.32-ல் வர்த்தகம் ஆகிறது.

மும்பை,

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரை சரிந்து 80,277 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் வரை சரிந்து 24,890 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகம் தொடங்குகிறது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காராணமாக கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் குறைந்து ரூ.91.32-ல் வர்த்தகம் ஆகிறது.