புதுச்சேரி

சவுக்குதோப்பில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி

அரியாங்குப்பம் அருகே சவுக்குதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தச்சு தொழிலாளி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் யோகலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 54). தச்சுத்தொழிலாளி. அவரது மனைவி அலமேலு. முருகனுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முருகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது அங்குள்ள சவுக்கு தோப்பில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்