புதுச்சேரி

இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார். எனவே அவர் இன்று முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் இன்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்ட சபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதல்-அமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் அங்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட அவர் 10.20 மணியளவில் அங்கிருந்து புறபட்டு சென்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவில் சட்டசபைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை