சினிமா செய்திகள்

’அந்த இயக்குனர் என்னை எல்லோர் முன்னாடியும் திட்டி அழ வைத்தார்’ - கூறும் முன்னணி நடிகை

தற்போது நட்சத்திர கதாநாயகிகளாக விளங்கும் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள்.

தினத்தந்தி

சென்னை,

பலர் கதாநாயகிகளாக சிறந்து விளங்க திரையுலகில் நுழைகிறார்கள். சிலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னணி கதாநாயகிகளாக விளங்குகிறார்கள். சிலர் ஒரு சில படங்களுடன் எந்த தடயமும் இல்லாமல் மறைந்து விடுகிறார்கள்.

தற்போது நட்சத்திர ஹீரோக்களாகவும், கதாநாயகிகளாகவும் சிறந்து விளங்கும் நட்சத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது நாம் பேசும் கதாநாயகியும் அவர்களில் ஒருவர்தான். இவர் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மிகப்பெரிய கிராஸைப் பெற்றுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல, கீர்த்தி சுரேஷ்தான். ஒரு நேர்காணலில், இவர், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், ஒரு இயக்குனர் தன்னை எல்லோர் முன்னிலையிலும் திட்டி அழ வைத்ததாக கூறினார்.

கீர்த்தி சுரேஷ் கூறுகையில்.. எனது மலையாளத் திரைப்படப் பயணம் கீதாஞ்சலி படத்துடன் தொடங்கியது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன். அப்போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு காட்சியை படமாக்கிய பிறகு, அவர் என்னைத் திட்டிவிட்டார். என் கண்களில் கண்ணீர் பெருகியது. அது எனது முதல் படம் என்பதால், நான் அழுதேன். அவர் அனைவரையும் ஒரே மாதிரியாகதான் பார்ப்பார். அவர் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனையும் அப்படிதான் திட்டுவார் என்றார்.

கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்