சினிமா செய்திகள்

"டிமான்ட்டி காலனி 3" படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

சென்னை,

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி , பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றன.

இந்நிலையில், டிமான்ட்டி காலனி 3 படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பிரபல நிறுவனமான ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அருள்நிதியின் திரைப்பயணத்தில் முதன்முறையாக ரூ.50 கோடிக்கும் அதிகமான ப்ரீ-பிசினஸ் செய்த படம் என்ற பெருமையை டிமான்ட்டி காலனி 3 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.