சினிமா செய்திகள்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்

பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

கோவை,

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நடிகர் சந்தானம் வந்தார். அவர், பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து