சினிமா செய்திகள்

நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த நடிகை கங்கனா ரணாவத்

காந்தாரா திரைப்படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்ததாக நடிகை கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பிரபல கன்னட திரைஉலக நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து தயாரித்த படம் காந்தாரா. இந்த படம் மாபெரும் வெற்றிபெற்று இருக்கிறது. சர்ச்சைகளுக்கு இடையிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல நடிகை கங்கனா ரணாவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடும்பத்துடன் வந்து காந்தாரா திரைப்படம் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு என்னை வியக்க வைத்தது. படம் முடிந்து தியேட்டருக்கு வெளியே வந்த பின்பும் எனக்கு நடுக்கம் நிற்கவில்லை. ரிஷப் ஷெட்டியின் நடிப்பை மறப்பதற்கு சாத்தியமே இல்லை. மிகவும் அதிரூபமான ஒரு சினிமாவை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த நினைவில் இருந்து நான் மீண்டு வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். இந்த திரைப்படத்தை நேரடியாக ஆஸ்காருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை