சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பாரதிராஜாவின் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகை மற்றும் தமிழ்நாடு பா.ஜ.கவின் துணைத் தலைவர் குஷ்பு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நம் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட, போற்றப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட இயக்குநரும், புகழ்பெற்றவருமான பாரதிராஜா நம்முடன் இல்லை என்பதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாக அமைந்துள்ளது. அவரது படங்கள் திரைப்பட உருவாக்கத்திற்கு ஒரு அளவுகோலாகத் திகழ்ந்துள்ளன; இனியும் அவ்வாறே இருக்கும். ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் அவர் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.
அவர் எப்போதும், 'என்னை இரண்டு பின்னல் சிகை அலங்காரத்தில் வைத்து ஒரு படம் செய்வோம்' என்று கூறுவார். அது நிறைவேறாத கனவாகவே இருக்கும். உங்களை நினைத்து மிகவும் வருந்துவேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.