சினிமா செய்திகள்

நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்

நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பு காரணமாக, உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.

தினத்தந்தி

தமிழில் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, திருமகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 2014-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு "டெஸ்ட்" படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

திருமணத்தில் சறுக்கல், உடல் எடை திடீரென கூடியது என்று அடுத்தடுத்து துவண்டுக் கொண்டிருந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு அடுத்த அதிர்ச்சியாக தந்தை காலமான செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்திருக்கிறது. நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் (83) உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். 

மீரா ஜாஸ்மின்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையின் புகைப்படங்களைப் பகிர்ந்து, 'இனிமேல் நாம் மீண்டும் சந்திக்கும் வரை' என உருகியுள்ளார்  திரையுலகினரும், ரசிகர்களும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து