சினிமா செய்திகள்

நீ சினிமாவில் கவனம் செலுத்து... நான் பார்த்துக் கொள்கிறேன்: கணவர் குறித்து மனம் திறந்த பிரியாமணி

முஸ்தபா ராஜ் என்பவரை பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தினத்தந்தி

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 40 வயதை கடந்தும் பிரியாமணி கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 'மைதான்' என்ற இந்தி படத்தில் நடித்தும் பாராட்டு பெற்றுள்ளார்.

முஸ்தபா ராஜ் என்பவரை பிரியாமணி காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு எதிராக பலர் அவதூறு பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பிரியாமணி தற்போது தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் திருமணத்துக்கு எதிராக வந்த அவதூறுகள் என்னை மிகவும் பாதித்தது. நான் மட்டும் இல்லாமல் எனது அம்மா, அப்பா ஆகியோரும் மனதளவில் கஷ்டப்பட்டனர். அப்போது கணவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாமல் சினிமாவில் கவனம் செலுத்து. என்ன நடந்தாலும் நான் செல்லும் பாதையில், நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், உன்னுடைய கை என்னுடன் இருக்க வேண்டும் என்றார். அப்படிப்பட்ட கணவர் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். எங்களுக்கு எதிராக நிறைய வதந்திகளை பரப்பினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி