சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன் சிலை திறப்பு விழா- குடும்பத்தோடு சென்ற அல்லு அர்ஜுன்

மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெறும் வெற்றியை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு துபாயில் உள்ள பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரபலமானவர்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார்.

இந்த மியூசியத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகிய இந்தி நட்சத்திரங்களின் சிலைகள் உள்ளன. தென்னிந்திய நடிகர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. முதல் முறையாக அல்லு அர்ஜுன் சிலை அமைந்திருக்கிறது.

லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், மகேஷ்பாபு ஆகியோருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மெழுகு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் துபாய் சென்று இருக்கிறார்.

புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்