சென்னை,
'விஷ்வம்பரா' ரிலீஸுக்காக 2 ஆண்டுகளாக ஆஷிகா ரங்கநாத் காத்திருக்கிறார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பது பல நடிகைகளின் கனவாக இருக்கும் நிலையில், அந்த வாய்ப்பு நடிகை ஆஷிகா ரங்கநாத்திற்கு 'விஷ்வம்பரா' திரைப்படத்தின் மூலம் கிடைத்தது.
இந்த திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஆஷிகா ரங்கநாத் இரண்டாவது கதாநாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
'விஷ்வம்பரா' திரைப்படத்தில் இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்தும், படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சிரஞ்சீவி, திரிஷா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள 'விஷ்வம்பரா' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது. படம் குறித்த அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.