Image credits : AI 
சினிமா செய்திகள்

இந்தியாவின் முதல் முழுநீள ஏஐ திரைப்படமாக உருவாகிறது 'அவிரா'

'அவிரா' திரைப்படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார்.

இந்திய திரையுலகில் முதன்முறையாக, முழுக்க முழுக்க 'ஃபோட்டோ ரியலிஸ்டிக்' (Photo Realistic AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் முழுநீள தமிழ்த் திரைப்படமாக 'அவிரா' உருவாகி வருகிறது. மனிதர்களையும், காட்சிகளையும் நிஜமாக தோற்றமளிக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் படம் உருவாக்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

இயக்குநர் பிரபாகரனின் புதிய முயற்சி

'அவிரா' திரைப்படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் அவரே எழுதியுள்ளார். புதிய தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த முயற்சி தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

புராணக் கதையை மையமாகக் கொண்ட பேண்டஸி

புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'அவிரா', பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் 'அவிரா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.