சினிமா செய்திகள்

அவதூறு வழக்கு: நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்

இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார்.

தினத்தந்தி

தமிழில் தாம்தூம் படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். கங்கனா அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதுபோல் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கங்கனா ரணாவத் ஜூஹூ போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராக (22-ந்தேதி) வேண்டும் என்று மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சர்ச்சை கருத்துக்கள் பதிவிடுவதாக வந்த புகாரின் பேரில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து