சினிமா செய்திகள்

ராஜமவுலி வெளியிட்ட அசத்தல் அப்டேட்... 'வாரணாசி' குறித்து புதிய தகவல்

இந்த திரைப்படத்தை, 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம், 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1,400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம்

சுமார் ரூ.1,400 கோடி செலவில் உருவாகி வரும் 'வாரணாசி', இந்திய திரையுலக வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாகக் கூறப்படுகிறது. அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மிக சாகசம் கலந்த இந்த திரைப்படம், திரேதா யுகம் முதல் கலியுகம் வரை பல காலகட்டங்களை இணைக்கும் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

விண்கல் ஆபத்தும்... வாரணாசியின் ரகசியங்களும்

அண்டவெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கல் ஏற்படுத்தும் ஆபத்தையும், வாரணாசி படித்துறைகளின் மர்மங்களையும் மையமாகக் கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் பனிப்பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

மகேஷ் பாபுவின் இரட்டை பரிமாணம்

இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, 'ருத்ரா' மற்றும் 'ஸ்ரீராமர்' என இருவேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், 'கும்பா' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இந்த திரைப்படம், 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது

சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, 'வாரணாசி' திரைப்படத்தின் சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் விஎப்எக்ஸ் (VFX) பணிகள் ஒரே நேரத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ராஜமௌலி கூறியுள்ளார். இந்த அப்டேட்டால் 'வாரணாசி' திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.