சினிமா செய்திகள்

சினிமாவில் எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன் - நடிகை டாப்சி

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சவாலாக எடுத்து நடித்தேன் என்று நடிகை டாப்சி கூறினார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்த டாப்சி இந்திக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியில் பிசியாக நடித்து வருகிறேன். தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 14 ஆண்டுகளை கடந்து விட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சவாலாக எடுத்து நடித்தேன். சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது.

இந்த நிலைக்கு வர எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறினேன். எனது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்து இருக்கிறது. இதை எனது சாதனையாக நினைத்து சந்தோஷப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது