சினிமா செய்திகள்

"தன் பெயரில் போலி அழைப்புகள்" - எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்

தன்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

'காந்தாரா' படத்தைத் தொடர்ந்து, இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் ருக்மினி வசந்த். ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தற்போது நடிகர் யாஷுடன் இணைந்து டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் "முக்கியமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்தி... 9445893273 என்ற எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்புகொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த எண் என்னுடையது அல்ல என்பதையும், அதிலிருந்து வரும் எந்த செய்திகளும் அல்லது அழைப்புகளும் முற்றிலும் போலியானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது ஈடுபடவோ வேண்டாம்.

இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது, மேலும் இதுபோன்ற மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும் அல்லது சரிபார்ப்புக்கும், நீங்கள் நேரடியாக என்னையோ அல்லது எனது குழுவையோ தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் அனைவருக்கும் நன்றி. ஆன்லைனில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருங்கள். " என்று தெரிவித்துள்ளார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை