சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்கிய 'அரசன்' படப்பிடிப்பு பணிகள்!

தற்போது அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் ‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்து நடைபெற உள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT