சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

தினத்தந்தி

கொழும்பு,

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தியேட்டர் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே தனது மனைவியுடன் நேரில் சென்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நேரில் பார்த்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவருடன் சில தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து பார்த்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்சேவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்