சினிமா செய்திகள்

மோசடி புகார்: பிரபல நடிகைக்கு கைது வாரண்டு...!

இந்தி நடிகை ஜரீன் கான் தமிழில் ‘நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தினத்தந்தி

பிரபல இந்தி நடிகை ஜரீன் கான். இவர் 'வீர்', 'ரெடி', 'ஹவுஸ்புல்-2' உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார், தமிழில் 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

கொல்கொத்தாவில் கடந்த 2018-ல் நடந்த துர்கா பூஜை விழாவில் நடனமாட ஜரீன் கானை விழாக்குழுவினர் ஒப்பந்தம் செய்து பணம் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும், பணம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தனக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், ஜரீன் கான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேல் முறையீடு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதையடுத்து ஜரீன் கானுக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ''என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல்-மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்'' என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை