சினிமா செய்திகள்

தங்கர்பச்சான் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசை

ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர் தங்கர்பச்சானுடன் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இணைந்து பணிபுரிகிறார்.

தினத்தந்தி

படத்துக்கு, 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்ட 'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற தரமான படங்களைக் கொடுத்தவர், தங்கர்பச்சான். இவருடைய இயக்கத்தில், 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படம் உருவாகிறது. வீரசக்தி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவரும் அழுத்தமான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏகாம்பரம், ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

அவர் டுவிட்டரில், "தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்துக்காக பாட்டு எழுதும்போது, சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்துக்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை, கண்களாவது இருக்குமா?" என அழுத்தமான மனஉணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்