சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும், மக்களுக்கு தேவையானவற்றை நேரடியாக அறிந்து செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஸ்ரேயா சரண், "தமிழக முதல்-அமைச்சர் விஜய் மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறார்.
மக்களுக்கு தேவையானவை என்ன என்பதை நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இனிவரும் காலங்களிலும் தமிழக முதக்-அமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என்று நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்தார்.
நடிகை ஸ்ரேயா சரண்