சினிமா செய்திகள்

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் படம்

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன்முதலாக ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

தினத்தந்தி

இது ஒரு குற்றப்பின்னணி யிலான திகில் படம். முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஜி.அருள்குமார் கூறியதாவது:-

இது ஒரு கிரைம் த்ரில்லர். ஒரு குற்றம் பற்றி விசாரணை நடத்தும் கதை. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பின்னணியில், ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். தினேஷ் லட்சுமணன் கதை எழுதி டைரக்டு செய்து இருக்கிறார்''. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை