தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய சிவக்குமாரிடம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முதலமைச்சர் ஆவாரா?" என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சிவக்குமார் , "அவர் (முதலமைச்சராக) வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்" எனக்கூறினார். ஏஐ வருகையால் ஓவியக்கலை பாதிக்கப்படுமா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சிவக்குமார், எப்படி என்றாலும் உங்களை விட உங்கள் தாத்தா பாட்டி பெரியவுங்கதான். எனவே எத்தனை ஏஐ வந்தாலும் ஒரிஜினலை ஒன்னுமே பண்ண முடியாது” என்றார்.