சினிமா செய்திகள்

மன உளைச்சலில் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து..

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டது. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் வர இயலவில்லை என இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

சென்னை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.

இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார். அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்கவேண்டும். அவர் பயன்படுத்திய இடத்தில் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி ஸ்டூடியோ நிர்வாகம் சார்பில் வக்கீல் அப்துல் சலீம், இளையராஜா சார்பில் வக்கீல் தியாகராஜன் ஆகியோர் கலந்து ஆலோசனை செய்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிப்பது என்று முடிவு செய்தனர்.

எனவே இன்று காலை 9 மணிக்கு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வார். 11 மணி வரை அங்கு தியானம் செய்ய உள்ளார். அதன்பின்னர் அவர் திருவண்ணாமலை புறப்பட்டுச் செல்வார் என்றும், இளையராஜாவின் இசைக்கருவிகளை அவருடைய உதவியாளர்கள் எடுத்துச் செல்வார்கள் என்றும் தகவல் வெளியானது.

இளையராஜா வருவார் என்பதால் பிரசாத் ஸ்டூடியோ வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் வர இயலவில்லை என இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்