கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது. நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கஸ்தூரி நிவாரண பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.